பங்களாதேஷில் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷில் மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம்!

பங்களாதேஷின் முதலாவது மெட்ரோ ரயில் இனை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று (28) டாக்காவில் திறந்து வைத்தார்.

தலைநகர் டாக்காவில் இருந்து உத்தரா முதல் அகர்கான் பகுதி வரை இந்த மெட்ரோ ரயில் அமைப்பு கட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுமானமும் 2030 க்குள் முடிக்கப்படும் என்றும் அதன் முதல் பகுதி 12 கிலோமீட்டர் எனவும் கூறப்படுகிறது.

டாக்காவில் இன்று மெட்ரோ வழித்தடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லும் முதல் அதிவேக ரயில் சேவை வங்கதேசத்தின் மாபெரும் சாதனை என்று கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.