நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கியில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கியில் அதிகரிப்பு!

2023 ஆம் ஆண்டில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, சுகாதார அமைச்சு 2022 டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளை விசேட டெங்கு தடுப்பு தினங்களாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, சகல பிரஜைகளும் தமது வீடுகளிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இந்த இரண்டு நாட்களிலும் அவற்றை அகற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வரை 75,434 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தில் பதிவாகியிருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.