இலங்கை வருகை தரும் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான புதிய முறைமை அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வருகை தரும் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான புதிய முறைமை அறிமுகம்!


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு அல்லது வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் உரிய அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.