பேருந்து செலுத்திக்கொண்டிருந்த சாரதி மரணித்ததில் விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்து செலுத்திக்கொண்டிருந்த சாரதி மரணித்ததில் விபத்து!


சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன் அதன் சாரதி தமது ஆசனத்திலேயே மரணமானதாக மத்தேகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


கொட்டாவ - பிலியந்தலை 342 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இந்த பேருந்து இன்று (20) தனது முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக கொட்டாவ பேருந்து நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, மத்தேகொட பிரதேசத்தில் வைத்து அதன் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


அந்த சந்தர்ப்பத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


வீதியைவிட்டு விலகிய பேருந்து வண்டி அருகிலிருந்து வீடொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதன்போது, குறித்த வீட்டினுள் தம்பதியொன்றும், அவர்களது குழந்தை ஒருவரும் இருந்துள்ளனர்.


பேருந்து வீட்டுக்குள் தொடர்ந்தும் பயணித்திருந்தால் மேலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கபில பெரேரா (54) என்பவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் மத்தேகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.