டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் புகார்!


இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (20) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சர் கமகே பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் எனவே இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகம் என்றும் இது குறித்து ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.