advertise here on top
Join yazhnews Whatsapp Community

வரவு செலவு திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய வைத்தியசாலை ஊழியர்கர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

வரவு செலவு திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட சுகாதார ஊழியர்கள் இன்று (08) 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அடக்குமுறையை நிறுத்துதல், வரி மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், சுகாதார சேவைக்கு 5% ஒதுக்கீடு, சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு உட்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.