நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - காற்றின் தரத்தில் ஆரோக்கியமற்ற நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - காற்றின் தரத்தில் ஆரோக்கியமற்ற நிலை!

இன்று (08) காலை நிலவரப்படி, இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

பத்தரமுல்லை, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய நகரங்கள் காற்றின் தர சுட்டெண்ணில் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.

அத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கேகாலை, தம்புள்ளை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்திய தீபகற்பத்தில் இருந்து வெளியேறும் தூசி துகள்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.