நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று (04) பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 11.00 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, வடமேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.


மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும், ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.