ஐஸ் ரக போதைப்பொருள் பாவனையில் தீவிரமடைந்துள்ள பாடசாலைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனையில் தீவிரமடைந்துள்ள பாடசாலைகள்!


பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்கள் ஊடாக ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை தீவிரமாக பரவிவருவதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.


குறித்த புலனாய்வு அறிக்கை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள், அவர்களது வயது, போதைப்பொருள் பாவனைக்குரிய காரணம் மற்றும் அதனை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்பன குறித்தும் அந்த புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


தரம் 8 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்து வருவதாகவும், தனியார் வகுப்புகளில் அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பல்கலைக்கழகங்களின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை அதிகளவில் காணப்படுவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.