பண மோசடி வழக்கு; ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண மோசடி வழக்கு; ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பிணை!


மோசடியாளராக பெயரிடப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதித்தது.


அவரை 50,000 ரூபா சொந்த பிணையிலும், அதே தொகையிலான சரீரப்பிணையில் செல்லவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணையின்போது, ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கைதுகளின்போது தேடி மற்றும் தெரிவு செய்தல் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினரை எச்சரித்தார்.


முன்னாள் தொழிலதிபரான ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து சுகேஷ் சந்திரசேகர் அச்சுறுத்தி பறித்த 200 கோடி ரூபாய் மூலம் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பல்வேறு வாய்ப்புக்களை அனுபவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதேவேளை அச்சுறுத்தி பறித்ததாக கூறப்படும் 200 கோடி ரூபாயில் இதுவரை 7.1 கோடி ரூபாவை பறிமுதல் செய்துள்ளதாகவும், மேலும் அவரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்ட அரச சட்டத்தரணி, ஜாக்குலினுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என்று வாதிட்டார்.


சுகேஷ் பற்றி அறிந்திருந்தும், பணத்துக்கு ஆசைப்பட்டு அவருடன் இணைந்து குற்றச் செயல்களில் பெர்ணான்டஸ் ஈடுபட்டதாகவும் அரச சட்டத்தரணி குற்றம் சுமத்தினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.