ஆசிரியைகளின் சாரியினை அகற்ற முன் ஜோசப் இற்கு கோவணம் கட்டப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியைகளின் சாரியினை அகற்ற முன் ஜோசப் இற்கு கோவணம் கட்டப்பட வேண்டும்!

பாடசாலை ஆசிரியர்களை சாரிக்கு பதிலாக வேறு ஆடையை அணிய வைக்க முயற்சிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோவணம் ஒன்றை அணிந்து பாடசாலைக்கு வந்தால் பொருத்தமானது என இலங்கை அரச கல்வி சேவை சங்கத்தின் தலைவர் திருமதி வசந்தா ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

“ஆசிரியர்களின் சாரியை அகற்ற ஜோசப் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இப்படியே போகுமா என்று தெரியவில்லை இன்னும் சில நாட்களில் ஆசிரியர்களும் இலகுவான ஆடைகளை அணிய வேண்டும் என்று ஜோசப் கோவணத்துடன் பாடசாலைக்கு வரவேண்டும் என்றும் சொல்வாரோ தெரியாது. 

இலங்கையின் கல்வி முறையில் பாடத்திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பான தரமான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டிய நேரத்தில், ஜோசப் போன்றோர்கள் இந்த சாரியினை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்”.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.