VIDEO: ராஜபக்சர்களை கடுமையாக சாடிய தேரர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: ராஜபக்சர்களை கடுமையாக சாடிய தேரர்!

ராஜபக்சர்களால் இந்த நாடு அழிக்கப்பட்டது என மிஹிந்தல ரஜமஹா விகாரையின் கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

விழுந்தும் மீண்டும் அரசியலுக்கு வருவது, அதன் ருசி தெரிந்ததால் தான் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால், அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் மாடுகள் என்று அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ருவான்மாலி விகாரையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வு ஒரு சாபக்கேடு என்றும் அந்த சாபம் நிறைவேறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்குகள் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்த அவர், பிக்குகள் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டாலே போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.