இன்று காலை அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்! (PHOTOS)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று காலை அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, பலர் காயம்! (PHOTOS)

அத்துருகிரிய பிரதேசத்தின் அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து அதுருகிரிய நோக்கி பயணித்த வேன் ஒன்றும் ஜீப் வண்டி ஒன்றும் 3.9 கிலோமீற்றர் தூணுக்கும் 4.1 கிலோமீற்றர் தூணுக்கும் இடையில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியின் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் மற்றும் வேனில் பயணித்த ஐந்து பெண்களும் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வேனில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.