![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizlDd5yYhidRL2mUEFvCsqburVlGJOtlkiXhkelwu-e2cCsnXRxr3BHjzA1z17B6GEqe79Co7L6HF4cC-dR5FyGv2C3jJPzdaE0dk3c3oC3ZzbxEuntRwhF7rU2RmCnaYS7mK0_RWV5bIUWtb02aggv-hP8EfgrKQWzg7iBLth0VWJyz1jWrNtfqfi/s16000/crime.jpg)
ஆபாசக் காணொளியை காட்டி , 07 வயதேயான தனது சொந்த மகளை வன்புணர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் 30 வயதான தந்தை சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மதுபோதையில் மகளை வன்புணர்ந்தார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதுடன், சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.