இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 20 வயது இளைஞன் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 20 வயது இளைஞன் கைது!!


கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி மொரட்டுவையில் பதிவாகிய இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (12) மாலை மொரட்டுவை எகொட உயன பிரதேசத்தில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்காக குறித்த இளைஞர் தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இரண்டு மொபைல் சிம்களை கொள்வனவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கைத்தொலைபேசிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் இன்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.