நேற்றைய துப்பாக்கிச்சூட்டு சம்பத்துடன் தொடர்புபட்ட நபர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய துப்பாக்கிச்சூட்டு சம்பத்துடன் தொடர்புபட்ட நபர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!


அஹுங்கல்ல முச்சக்கர வண்டி நிலையத்தில் நேற்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று மாலை விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அஹுங்கல்ல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.


அஹுங்கல்ல பகுதியில் உள்ள கல் வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.