ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள உயர் நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள உயர் நீதிமன்றம்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமானவர்களைத் தண்டிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பதின்மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் விரைவில் வழங்கவுள்ளது.


அதன்படி, இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் உரிய நேரத்தில் வழங்கும்.


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, மனுதாரர் மற்றும் பிரதிவாதி தரப்பினர் முன்வைத்த வாதங்களை நிறைவு செய்துள்ளது.


அத்துடன் மூன்று வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யுமாறு கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான இந்த மனுக்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது.


எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்குகள் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட 13 மனுதாரர் தரப்புக்கள், ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமானவர்களைத் தண்டிக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளன.


அத்துடன் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் புவனேக அலுவிஹாரே, நீதியரசர் எல்.டி.பி தெஹிதெனிய, நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர் எஸ்.துரைராஜா, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதியரசர் சிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய 07 பேர் அமர்வின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.


மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனோகர டி சில்வா, சாலிய பீரிஸ், சட்டத்தரணி காமினி பெரேரா உட்பட்டவர்கள் முன்னிலையாகினர்.


சட்டமா அதிபர் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம்; பிரியந்த நவன முன்னிலையானார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் பைசர் முஸ்தபா முன்னிலையானார்.


முன்னாள் காவல்துறை மா அதிபர் சார்பில் சட்டத்தரணி விரான் கொரயாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும்,கொழும்பு பேராயர் சார்பாக சாமில் பெரேராவும் முன்னிலையாகினர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.