கைக்குழந்தை ஒன்றை விற்க முயன்ற இலங்கையர் டுபாயில் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைக்குழந்தை ஒன்றை விற்க முயன்ற இலங்கையர் டுபாயில் கைது!!


12,000 திர்ஹம்களுக்கு சமூக ஊடகங்கள் ஊடாக கைக்குழந்தையொன்றை விற்க முயன்ற இலங்கைப் பெண் மற்றும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


35 வயதான இந்தோனேசியப் பெண் ஒருவர் தனது பிறந்த குழந்தையை பணத் தேவைக்காக விற்க முயன்றதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


45 வயதுடைய இலங்கையர் உட்பட இரண்டு பெண்கள் அவருக்கு வாங்குபவரைக் கண்டுபிடிக்க உதவியுள்ளனர்.


கடந்த பிப்ரவரி மாதம் 2 மாத குழந்தையை விற்பனை செய்வதாக ஆன்லைன் விளம்பரம் வெளியானதை அடுத்து துபாய் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விளம்பரத்தை இலங்கைப் பெண்ணே வெளியிட்டிருப்பது மேலும் தெரியவந்தது.


கடந்த வாரம் துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மூவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.


இதன்படி, சந்தேகநபர் ஒருவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் 4,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.