![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglonTW23su715oDBSa3w20Kv7IcIQ5TrydXgxu4aJb1FGUQs0-s_ieLd9qIOrHtzAXxcFhWbi2i31SU5SlUaGQzAfFxJiLDnIuaODadijGvA2cXdJt2TONpLUgd22M4W5ge35Ug1-tpfQNwHmo7Ggb0dtkeZ8Q_cJdaRmDad098Z-LB6-Lw6zZ2oGg/s16000/k.jpg)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது கொழும்பு ஏழில், ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு கோரி ஜனாதிபதி அலுவலகத்திற்கு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊழியர்கள் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் உள்ள தனது முன்னாள் இல்லத்தை புனரமைத்ததன் பின்னர் அங்கு செல்லவுள்ளார்.
ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள காலி வீட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)