சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்பு!

சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு சென்ஸர் மின்குமிழ்கள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சாய்ந்தமருதை ஒளியூட்டும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு இந்த மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீமின் முயற்சியால், 10 சென்ஸர் மின்குழிகள் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளித்து, அதனை தேவையான இடங்களில் பொருத்தியும் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம், மரைக்காயர்களான ஏ.சீ.எம்.இக்பால், எம்.ஐ.உதுமாலெப்பை (எவசைன்), நிர்வாக உத்தியோத்தர் எம்.எஸ்.எம்.றசீது ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.