advertise here on top
Join yazhnews Whatsapp Community

நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பிரஜை!

வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் தென் கொரிய சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டலின் நீச்சல் தடாத்தில் 43 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

நீச்சல் தடாகத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது கைத்தொலைபேசியில் அவர் தடாகத் குதிக்கும் காட்சிகள் அடங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணி தடாகத்தின் அடிப்பகுதியில் தலை மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.