இரத்தினகல் ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அரவீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்தினகல் ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அரவீடு!


கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த 11ஆம் திகதி அறிவிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வருமான வரி அறவிடப்படும் எனத் தெரிவித்தார்.

"2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்தின் விதிகளின்படி, இரத்தினக்கல் ஏற்றுமதியின் வருமானத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். 

நாட்டில் தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, மேற்குறிப்பிட்ட உள்நாட்டு வருவாய் திருத்த மசோதாவின் விதிகளின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அனைவருக்கும் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30% வருமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதல் 3,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இரத்தினக்கற் பொதிகளை ஒன்லைன் முறையின் ஊடாக ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.