250 மில்லியனுக்கும் அதிகமான முறைகேடு: கொழும்பு வர்த்தக பெண்ணுக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

250 மில்லியனுக்கும் அதிகமான முறைகேடு: கொழும்பு வர்த்தக பெண்ணுக்கு விளக்கமறியல்!

பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திவந்த குறித்த சந்தேக நபர், பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் ரூபா பெறுமதியான இலங்கை பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், 60,000 அமெரிக்க டொலர், 100,000 அவுஸ்திரேலிய டொலர் மற்றும் தங்க நகைகளையும் மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வெளிநாடுகளில் பண வைப்பு மற்றும் வேறு தொழில்களில் பணத்தை வைப்பிலிடுவதற்கு இலாபகரமான பணத்தை வழங்குவதாக கூறி கொழும்பில் ஒரு நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

அவரது நிறுவனத்தில் கோடீஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் வைப்புகளை செய்திருப்பது தற்போதைய காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், வைப்பு செய்யப்பட்ட பணத்திற்கான வட்டியை செலுத்தாததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.