நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு எந்தவித உடன்பாடுகளின்றி ரூ. 218 கோடி பணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு எந்தவித உடன்பாடுகளின்றி ரூ. 218 கோடி பணம்!

2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் செலவினங்களுக்காக சுகாதார அமைச்சு ரூ. 218 கோடி சய்டம் (SAITM) அல்லது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையுடன் எவ்வித உடன்பாடும் செய்து கொள்ளாமல் செலவிட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அனுகல் படுகையின் கீழ் பத்து வருடங்களுக்கு அரசாங்கத்திடம் கையகப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரையில் அவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்பட்டால் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை பத்து வருடங்களுக்கு அரசாங்கத்தின் வசம் இருக்கும் எனவும், அந்த வைத்தியசாலை இலங்கை வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ. 101 கோடி இனை செலுத்தியதன் பின்னர் அது சொந்தமாக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளபடி, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையின் செலவுகளை ஈடுகட்ட சுகாதார அமைச்சு மேற்படி பணம் செலுத்தியுள்ளதாகவும், அவ்வாறான எந்த உடன்படிக்கையிலும் ஈடுபடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.