WATCH: வாகனத்தை தவிர்க்க முற்பட்ட 14 வயது மாணவன் கால்வாயில் விழுந்து பலி!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

WATCH: வாகனத்தை தவிர்க்க முற்பட்ட 14 வயது மாணவன் கால்வாயில் விழுந்து பலி!


குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 


வீதியில் சென்ற வாகனத்தை தவிர்க்க முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே பாடசாலை பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இம் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.