![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGL9fQ93t4OR37lLTiRqoI2kxLntmzYs3AAvpg9YeCMpCm3XvUtBF8TWzg5UHH35EeU5OHEVHgC6BgwIWz0mP8lu-bjAFsXsIZNCiwnvvUGHBxPIpGm3PKoTIdby8IFeGHbINMD5kpaDaGwqY1GAGoxARbb3plCls-wFZis1VJzXyBdE9FsmZjagpd/s16000/colombo.jpg)
டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.