![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMcily4K6x6j_yHn_btrELD5zOGmFo8WAHWR7C4wZP-0uFnIUysxnp9XtcnPk_z74YhmrC8ANmRK9EbpkeOzIF4OUuahYhGPEwiFqhBVjuNkkYvBNT6QRGD2z4fALCthhjH3WGpNmYmJSqs5k2h6dBP6A7NMnUVOxSfruBjr0nMUVlDckvmWpe7O89XA/s16000/B31E862C-4605-48C6-9475-9AFE7DA714A6.jpeg)
தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையால், ஏராளமானோர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் ஆர்வத்தால், சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் விளம்பரம் செய்து, அந்தந்த நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் குறித்து, நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்து வருகின்றன.
எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு கடவுச்சீட்டை அல்லது பணத்தை வழங்குவதற்கு முன்னர், அந்த நிறுவனம் ஒரு சட்டப்பூர்வ நிறுவனமா என்பதைக் கண்டறியுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களை வலியுறுத்துகிறது.
பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாகவோ அல்லது பணியகத்தின் 24 மணிநேர தகவல் நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989ஐ அழைப்பதன் மூலமாகவோ பொதுமக்கள் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். (யாழ் நியூஸ்)