மக்கள் சக்தியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் - நலிந்த ஜயதிஸ்ஸ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் சக்தியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் - நலிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய அரசாங்கத்தில் யார் பதவிகளைப் பெற்றாலும் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என தேசிய மக்கள் சக்கியின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தியால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். 

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் கூடிய விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஸ்திரமாக இருந்தாலும் அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.