எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை; ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் திருட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை; ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணம் திருட்டு!!


இரத்மலானை, பெலெக் கடே சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஆயுதம் ஏந்திய இருவரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், 1,158,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர்கள் தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.