பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலி!


கேகாலையில் இன்று (10) பதிவான பல வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.


விபத்தில் மேலும் 02 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை ரன்வல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் கண்டி நோக்கி பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர்கள் 27 வயதுடைய துல்ஹிரிய மற்றும் வெயாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


வேன் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணமானதாக தெரிவித்த பொலிஸார், வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.