விஷம் கலந்த அரிசி - சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஷம் கலந்த அரிசி - சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பு!

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் மாதிரிகள் ஏற்கனவே அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரிவின் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார்.

இதன்படி, ஆய்வு அறிக்கைகள் அடுத்த வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் வாடிக்கையாளருக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவை 0112 112 718 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பிரிவு பொதுமக்களைக் கோரியுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.