மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) தெரிவித்துள்ளார்.

பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சபையை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய சபையை நியமித்திருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பேரவையை முதலில் நியமித்து அதன் பின்னர் கலந்துரையாடி உரிய நியமனங்களை செய்திருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பெரிய அமைச்சரவையை நியமித்ததன் பின்னர், ஜனாதிபதி தேசிய சபையொன்றை அமைக்கவுள்ளதாகவும், அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு தங்களால் பங்களிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.