மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த பிரபல ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த பிரபல ஆசிரியர் கைது!


திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்குச் சென்ற மூன்று மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் (28) ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாளாம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே இச்சம்பவம் நடந்துள்ளது.


குறித்து ஆசிரியர் பற்றி மாணவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும் பெற்றோர்கள் அதனை பெரிது படுத்தாமல் இருந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு குறித்த ஆசிரியர் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாணவர்களின் வாக்குமூலத்தை பெற்றது அடுத்து பிரபல ஆங்கில ஆசிரியரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.


இதன் போது குறித்த மாணவர்கள் தொடர்பிலான சட்ட வைத்திய அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைக்கும் வரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


-அப்துல்சலாம் யாசீம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.