கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்வதே தற்போதைய எமது தேவை! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்வதே தற்போதைய எமது தேவை! -ஜனாதிபதி

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று பிரதான கடன் வழங்குனர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதே இலங்கையின் தற்போதைய தேவை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நாங்கள் IMF உடன் விவாதித்தோம். நாங்கள் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்திற்கு வந்துள்ளோம். ஆனால் இப்போது நாங்கள் எங்கள் கடன் வழங்குனர்களை சமாளிக்க வேண்டும். நாங்கள் முன்பு அதைச் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் இந்த கடுமையான நெருக்கடி எங்களிடம் இல்லை. ஆனால், இப்போது நாங்கள் எங்கள் கடன் வழங்குனர்களை சமாளிக்க வேண்டும்,” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் தொடர்பான உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு இடம்பெற்ற பின்னர் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் இடம்பெறும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்ப்பது மூன்று கடன் வழங்குனர்களும் எவ்வாறு கடன் நிவாரணம் வழங்கப் போகிறது என்பது குறித்த ஒப்பந்தத்தையே என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.