பாராளுமன்றத்தின் பொது காட்சியகம் நாளை முதல் மக்கள் பார்வைக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்றத்தின் பொது காட்சியகம் நாளை முதல் மக்கள் பார்வைக்கு!

பாராளுமன்றத்தின் பொது காட்சியகம் நாளை (20) முதல் திறக்கப்படும் என சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோவிட் நிலைமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியத்தை சார்ஜென்ட் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி நாளை முதல் இது அமுல்படுத்தப்படவுள்ளதுடன், கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிகாரிகள் www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் செய்தியை அனுப்ப முடியும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.