பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைக்குண்டுடன் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைக்குண்டுடன் கைது!!


தெமட்கொட ஆராமய வீதி பகுதியில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர். 

சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸார், சந்தேகநபரால் திருடப்பட்டதாக நம்பப்படும் பல நூற்றுக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த கைக்குண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர். 

சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள், 10 மடிக்கணினிகள், ஒரு பியானோ, ஒரு கிடார், 520 கழற்றப்பட்ட கைக்கடிகாரங்கள் மற்றும் 3 தொலைக்காட்சிகள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். 

சந்தேக நபர் இன்று மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.