தாமரை கோபுரத்தின் முதல் மூன்று நாட்களில் வருமான விபரம் வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாமரை கோபுரத்தின் முதல் மூன்று நாட்களில் வருமான விபரம் வெளியானது!!


கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த முதல் 3 நாட்களில் 7.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.


முதல் 3 நாட்களில் சுமார் 14,000 பேர் கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமும் நேற்று (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அதன்படி, பொதுமக்கள் இப்போது மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம், இருப்பினும், டிக்கெட்டுகள் இரவு 10:00 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.