ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் வெளியிடப்பட்ட 3ஆவது அவரி அவிழ்கை விழா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் வெளியிடப்பட்ட 3ஆவது அவரி அவிழ்கை விழா

 ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 ஆவது அவரி சஞ்சிகையின் அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா)  சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

விஷேட  அதிதியாக ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புர்கான் பீ இப்திகார் கலந்து சிறப்பித்தார்.

பேஜஸ் அறிவு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஆய்வாளருமான சிராஜ் மசூர் நூல் பற்றிய விமர்சனத்தை நிகழ்த்தியதுடன் அவரி 3 ஆவது சஞ்சிகையின் ஆசிரியராக லைலா அக்ஷியா செயற்படுகிறார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் உபதலைவர் என்.எம். ஆரிபா வரவேற்புரையையும் தலைவி மஷூறா கஹூறுத்தீன் தலைமையுரையையும்,  அவரி சஞ்சிகையின் 3ஆவது வெளியீட்டின் ஆசிரியர் லைலா அக்ஷியா பதிலுரையையும் வழங்கியதுடன் ஏறாவூர் ஜிப்ரியா பாடல் ஒன்றையும் பாடினார்.

அத்துடன் கிளப்பின் நிர்வாக உறுப்பினர்களான எம்.பி.பர்ஸானா நன்றியுரையை வழங்கியதுடன் பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சிறப்பாக செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.