பல்கலைகழகம் தெரிவான தெ லெஜன்ட் கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைகழகம் தெரிவான தெ லெஜன்ட் கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு!

இம்முறை வெளியான கா.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில்  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய  தெ  லெஜன்ட் கல்லூரி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில்  பேருவளை தெ லெஜன்ட் கல்லூரியில் 
இடம்பெற்றது.

தெ  லெஜன்ட் கல்லூரியில் கல்வி கற்று (2021/2022) க.பொ.த  உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய கணிதம், விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களில் அதிகமானோர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இதில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த இபாதா இம்தியாஸ் எனும் மாணவி கணிதத் துறையில் தமிழ் மொழி மூலம் தோற்றி 3A (Merit Pass) (Z-Score 2.4180) சித்திகளோடு மாவட்ட ரீதியில் 10ஆம் இடத்தினைப் பெற்று தனது பெற்றோருக்கும் தெ  லெஜன்ட் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 தெ  லெஜன்ட் கல்லூரியின் பணிப்பாளர் அஸ்ரி ஆப்தின் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய ஏனைய மாணவர்களும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். 

இதன்போது  இக் கல்வி நிறுவனத்தின் நிருவாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.