வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை!!

இம்மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 181,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 24 கரட் தங்கம் ஒரு பவுண் 173,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கமைய 27 நாட்களுக்குள் 24 கரட் தங்கம் 8,500 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

இதேவேளை இந்த மாதத்தின் முதல் பகுதியில் 22 கரட் தங்கம் ஒரு பவுண், 166,250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது 22 கரட் தங்கம் ஒரு பவுண், 158,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் 7,750 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தமையே தங்கத்தின் விலை குறைவடைந்தமைக்கு காரணம் என செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைய சாத்தியம் காணப்படுவதாகவும் செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.