ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!!

சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 2023 ஆண்டில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் பல்வேறு துறைகளிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவனி பற்றாக்குறையினால் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.