பேராதெனிய பல்கலைக்கழக மாணவர் சடலமாக மீட்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேராதெனிய பல்கலைக்கழக மாணவர் சடலமாக மீட்பு!!


கடந்த வாரம் காணாமல் போனதாக கூறப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


24 வயதுடைய மாணவரின் சடலம் கண்டி மகாவலி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உயிரிழந்தவர் யக்கலையை வசிப்பிடமாகவும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் 4 ஆம் வருட மாணவரும் ஆவார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து பேராதனைப் பொலிஸார் குறித்த மாணவனைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


செப்டம்பர் 16 ஆம் திகதி குறித்த மாணவர் எழுதிய கடிதம் அவரது தங்கும் விடுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவரின் மரணத்திற்கான காரணம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.