இவ்வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறிவர்களின் எண்ணிக்கை இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவ்வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறிவர்களின் எண்ணிக்கை இது தான்!

இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரை 200,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இன்றுவரை மொத்தமாக 208,772 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில், 2022 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 2,858 இலங்கையர்கள் தென் கொரியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் 5,000 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக SLBFE மேலும் கூறியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான இலங்கையர்களின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.