PHOTOS: எரிபொருள் வரிசையில் நின்ற பல வாகனங்களை மோதித்தள்ளிய ஜீப் வண்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: எரிபொருள் வரிசையில் நின்ற பல வாகனங்களை மோதித்தள்ளிய ஜீப் வண்டி!


கல்பிட்டி ஏத்தாலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் மோதியதன் காரணமாக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


பாலாவியில் இருந்து கல்பிட்டி நோக்கிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.


சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியானது மனித உரிமைகள் ஆணைக்குழு புத்தளம் கிளைக்கு சொந்தமானது எனவும், சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கல்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.