இலங்கை தனது கடன் தாங்க முடியாததாக இருப்பதால், கடன் நிலைத்தன்மையை மீண்டும் நிறுவுவதற்கு கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே சர்வதேச நாணய நிதியம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போதும் இதே உறுதிமொழியை நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தவே இந்த விஜயம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கான தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே சர்வதேச நாணய நிதியம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போதும் இதே உறுதிமொழியை நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்தை ஏற்படுத்தவே இந்த விஜயம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)