நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இந்தியா திருவனந்தபுர விமான நிலையத்தின் வருவாய் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இந்தியா திருவனந்தபுர விமான நிலையத்தின் வருவாய் அதிகரிப்பு!

இலங்கையில் இருந்து மேலும் நான்கு சர்வதேச விமானங்கள் சனிக்கிழமையன்று (20) எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

ஏழு தசாப்தங்களில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டுடன் போராடி வருகிறது.

இதன் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட மொத்த விமானங்களின் எண்ணிக்கை 208ஐ தொட்டது. இவற்றில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகும். இதுவரை 130 ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 

ஃப்ளை துபாய், ஓமான் எயார், கல்ஃப் எயார், எயார் அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகியவை பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன.

இந்த நிறுத்தங்கள் விமான நிலையம் தரையிறங்கும் கட்டணமாக மட்டும் சுமார் 1.5 கோடி இந்திய ரூபாய் ஈட்ட உதவியது. இது எரிபொருள் நிரப்பும் வருவாயை சேர்க்கவில்லை. நாட்டின் எரிபொருள் பற்றாக்குறை கட்டுப்பாட்டை மீறியதிலிருந்து, அதாவது மே 27 முதல், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்பத் தொடங்கியுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.