ஜனாதிபதி வீட்டில் வெளிநாட்டு மதுபான போத்தலை திருடிய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வீட்டில் வெளிநாட்டு மதுபான போத்தலை திருடிய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட போது, ​​கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை 2022 ஆகஸ்ட் 24ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.