தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு தொடர்பான மீளாய்வு கூட்டம் இன்று (23) காலை ஆன்லைனில் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகனம் அல்லாத எரிபொருள் தேவைப் பதிவு மற்றும் சுற்றுலா எரிபொருள் அனுமதிச் சீட்டு ஆகியவை செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த மூன்று வாரங்களில் பெறப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடுகையில் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டின் விசேட வகை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)