விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து!

அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய அமைச்சரவை உத்தரவுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அமைச்சரவை முன்னர் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், ஏற்கனவே பொது போக்குவரத்து சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளமை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போதுமான கால அவகாசம் இருப்பதைக் கருத்திற்கொண்டு, குறித்த அமைச்சரவை தீர்மானத்தின்படி, இந்த சுற்றறிக்கையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் கீழே (சிங்கள மொழியில்), (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.