QR முறையில் எரிபொருள் வழங்கும் திட்டம் தோல்வி - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்! (VIDEO)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

QR முறையில் எரிபொருள் வழங்கும் திட்டம் தோல்வி - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்! (VIDEO)

QR முறைமையில்  எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் எரிபொருள் போதாது என அவர் கூறுகிறார்.

இந்த புதிய முறைமைக்காக 11 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் 7.5 இலட்சம் சாரதிகள் முச்சக்கரவண்டி வேலையில் தொழிலாக ஈடுபட்டு வருவதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளை தொழிலாக ஓட்டுபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், முச்சக்கரவண்டி ஓட்டாத 11 இலட்சம் நபர்களை நீக்கிவிட்டு 07 இலட்சம் பேருக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கினால், எமக்கு வாரத்திற்கு குறைந்தது 15 லிட்டர் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

பெற்றோல் நிலையங்களில் பொலிஸ் பிரிவிற்கு ஏற்ப எரிபொருள் வழங்கப்படுவது அநியாயமான முறை எனவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் தொழிற்சங்கம் அல்லாத முச்சக்கர வண்டி ஓட்டுனர்களினால் பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

எனவே, எரிபொருள் மோசடி அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளையும் பாதிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.